நேரமின்மை, தொழில் தொடர்பான பயணங்கள் அதிகம் இருந்ததால் – வ….20 வழிகள் கட்டுரையை எழுத முடியவில்லை. மன்னிகா வேண்டுகிறேன். அடுத்த வாரம் வரும்.
அதற்குமுன் இந்த வாரத்திற்கான சிறு கருத்து பகிர்வு.
ஏற்புத்தன்மை – receptivity – ஐ ஆர்வம் மூலமே பெற முடியும் . காரணம் அதில் இறைவனின் வித்து உள்ளது என்கிறார்.
அப்படியென்றால் ஆர்வம் என்பதன் பின் உள்ள தத்துவம் என்ன?
பிரம்மம் சிருஷ்டியுள் இருளில் புதைத்த பிறகு, தான் பிரம்மம் என்ற தன்னுணர்வு வந்து , தான் அஞ்ஞானத்தில் இருந்து மீண்டு வரும் ஆனந்தத்தை அடைய எழும் சக்தி ஆர்வம். அதுபோல நம்முள் உள்ள அன்னையை நாம் காண்பது நம் நம் தன்னுணர்வை பெற்றதை காட்டுகிறது. நடைமுறைக்கு ஏற்ற வகையில் சொல்வதானால்
நாம் ஆனந்தம், முன்னேற்றம் ஆகியவற்றிக்காக விரும்பி செய்யும் செயல்கள் , அதன் பின் உள்ள எழுச்சி சக்தி ஆர்வம்.
எந்த வகையான ஆர்வம் அன்னையை அழைக்கும்?
உடலில் – உழைப்புக்கான ஆர்வம்-திறமை, திறன் – க்கான ஆர்வம்.,
உணர்வில் – பலனுக்கான ஆர்வம் இல்லாமல் செம்மை, முழுமைக்கான ஆர்வம்.,
அறிவில் – செறிவு , விவேகம், பாகுபாடு – க்கான ஆர்வம்.
ஆன்மாவில் – மேலே சொன்ன மூன்று நிலைகளிலும் அன்னை விரும்பும் பல பண்புகளை வெளிப்படுத்தும் ஆர்வம்.
இப்படி எப்போதும் அன்னையை நினைக்கும் concentration / being conscious. அதன் மூலம் அன்னை விரும்புவதை மட்டுமே செய்யும் மனநிலை. அதன் மூலம் அன்னை எப்படி நம்மிடம் வருகிறார்கள் என்று காணும் ஆர்வம்.அதன் மூலம் சமர்ப்பணம் செய்வதற்கான ஆர்வம்.
இவற்றின் process மற்றும் அது வெளிப்படும் விதத்தை – நம் வாழ்வில் இதுவரை அருளால் நடந்தது என்பனவற்றில் பொறுத்தி பார்த்தால் ல் – நாம் அன்னையை நாடிப்போவது வழிபாடு; அன்னையை நம்மை நாடி வரச்செய்வது ஆர்வம் – என்பது புரியும்.