நாம் ஒரு காரியம் நடக்க அன்னையை அனுப்புவது அன்னை ஒளியை அனுப்புவது என்று ஒரு முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலும் அற்புதங்களைக் கொண்டு வர அந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும் நடைமுறை பயன்பாட்டில், இந்த அணுகுமுறை எதிர்பார்த்த முடிவுகளைத் தருவதில்லை. . எதை நாம் ஒளி என்று குறிப்பிடுகிறோமோ- அது நமக்கு அன்னையின் ஒளியாக இருந்தாலும் சரி அல்லது universal light என்று secret இல் சொல்லப்படுவதாக இருந்தாலும் சரி- அதை அனுப்பும்போது ஒரே முறையிலேயே செய்கிறோம். அன்னை ஒளி ஒரு நபரின், ஒரு சூழலில் பாய்வதாக நினைக்கிறோம் . அதன் மூலம் நாம் நினைக்கும் காரியம் நடந்து விடும் என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி நடப்பதில்லை.
அன்னை ஆரம்பத்தில் தன் பெயரில் , தனக்காக எந்த முறையைப் பயன்படுத்தினாலும், அவருடைய Force உலகத்தில் செயல்படுவதைக் காண்பிப்பதற்கு பதிலளிப்பார். ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு நமக்கு ஒரு “மாற்றம்” தேவை. நம் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற மட்டுமே அன்னை இங்கு வரவில்லை. அவருக்கு தேவை மனநிலையில் உயர்வு, தாழ்ந்த சுபாவத்தில் இருந்து ஒரு மாற்றம். அவரது F orce மனிதனின் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்த வந்த சக்தி. நம் conciousness உயர நாம் செய்யும் அத் தனை விஷயங்களுக்கும் அது ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தைத் தருகிறது.
எனவே சில Higher Conciousness அடிப்படையில் ஒளியை / அன்னையை அனுப்புவது உயர்ந்த பலனைத்தரும்.
நான் அடிக்கடி சில முடிவுகளை எதிர்பார்த்து அன்னையை, அன்னையின் ஒளியை அனுப்புவேன் . அனைத்திற்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கும். சில முறை நான் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுகிறேன். ஆனால் நடக்காவிட்டால் , தோல்விகள் ஏற்பட்டால், சீசன், நேரம் , சூழல், மார்க்கெட் , மனிதர்கள் , சமுதாயம் போன்றவற்றின் மேல் பழி போட்டுவிட்டு சமாதானம் அடைவேன். வெற்றி பெற்ற இடங்களில் இந்த வாதங்கள் செயல்படவில்லை என்பதை வசதியாக மறந்து விடுவேன்.
உண்மைகள் ஏற்று கொள்ளத் தக்கவையாக இல்லாத போது நமக்கு அவற்றைப் புறக்கணிக்க ஆயிரம் வழி தோன்றும். நாம் காரணமில்லை என்று நியாயப்படுத்த நாம் செய்யும் சிந்தனைகள் நம் கற்பனைத்திறனைக் iக் காட்டும். நம் கடந்த காலத்தை இந்த பார்வையில் பார்த்தால் குறிப்பாக நாம் எதிர்பார்த்தது நடக்காத இடங்களை பார்த்தால் இது புரியும்.
நம் personality – யின் ஒரு இடம் தான் எதிர்பார்த்த முடிவு வருவதைத் தடுத்தது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நமக்கு வரும் தடைகள், பிரச்சினைகள், அனுபவங்களை நம் பெர்சோனாலிட்டி-யின் அடிப்படையில் நாம் பார்ப்பதில்லை. பார்த்தாலும் புரியவில்லை என்று விட்டு விடுவோம். அல்லது பிறர் மீது , சூழல் மீது பழி போடுவோம். அப்படி எடுக்கும் முடிவுகளை பார்த்தாலே நாம் இதைக் காண பயப்படுகிறோம் எனபது புரியும். அது புரிந்தால் அதில் இருந்து வெளியே வந்து அடுத்த உயர்ந்த நிலையில் நின்று அன்னையை அனுப்பினால் காரியம் நிறைவேறும்.
காரணம் அன்னை என்பது ஒரு சக்தி, ஒரு ஆற்றல். அதற்கு நோக்கம் , திசை ஒன்றே. .அதனால் அதை அனுப்பும் பொது நம் personality மற்றும் பெறுபவரின் personality யில் உள்ள positive மற்றும் negative இரண்டிற்கும் அருளைத்தருகிறது. அதுவே காரியத்தைச் சாதிக்கிறது. அதை நடக்காத காரியங்களால் முதல் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை கவனித்துப் பார்த்தால் அதன் வித்து இருக்கும் இடம் தெரியும்.