நம் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றுவது மட்டுமே அன்னையின் வேலை அல்ல. அவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி. திருஉருமாற்றம்.
நம் பிரச்சினைகளுக்கு நம்மிடம் ஒரு மன மாற்றம் தேவை என்ற அவசியத்தை உணராமல் நாம் எப்படி இருந்தாலும் அன்னை நமக்காக எல்லாம் செய்வார் என்று இருந்தால் வீணாக காத்திருந்து ஏமாற நேரிடலாம். அன்னை உன் ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நீ அன்னையின் லட்சியங்களை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். அன்னை விதித்த நிபந்தனைகளை எல்லாம் நாம் பூர்த்தி செய்யாவிட்டாலும் நம் எண்ணங்களை எல்லாம் அன்னை பூர்த்தி செய்வார் என்பது அர்த்தமற்ற எண்ணம் – என்கிறார் கர்மயோகி அவர்கள்.
நம்மிடையே ஒரு அன்னைக்குப் பிடிக்காத குணம் இருந்தால் அதை மறைப்போமே தவிர, வெளியே காட்ட வேட்கபடுகிறோமே தவிர அதை மாற்ற விரும்புவதில்லை. உண்மையில் அதை விரும்பிகிறோம் ரசிக்கிறோம் என்பதே உண்மை. உண்மையில் விடமுடியாத குணங்கள் விடப் பிரியப்படாத குணங்கள்.
எதற்கும் ஒரு ஆரம்பம் தேவை என்பதால் அத்தகைய பண்புகளுக்கு மாறுவதற்கு மிக எளிய வழியாக கர்மயோகி அவர்கள் சொல்வது,” இந்த நிமிடம் முதல் நமக்கு எது உயர்ந்ததாக தெரிகிறதோ அந்த அளவு உயர்வான முறையில் செயல்படல், ஒவ்வொரு நிலையிலும் நமக்கு நாம் நல்லது கெட்டது தெரியும். எ அதில் நல்லதை மட்டுமே செய்தல், நம்மளவில் நல்லவர் என்று நாம் நினைப்பவர் செய்ய அஞ்சும் செயல்களை செய்யாமல் இருத்தல் முதலியவையே அவை. அதன் பிறகு தேவை படுவது:
- கவனமற்ற கவலையற்ற மனநிலையில் இருந்து பொறுப்பான லட்சியமான மனநிலை
- மனம் ஒரு நிலை இல்லாமல் இருப்பதில் இருந்து லட்சியமே குறி என்ற நிலை.
- ஆசை, கோபம், எரிச்சல் , வந்து பிறகு அடங்குவதி ல் இருந்து நிதானமான சம சீர் நிலை.
- பிரச்சினை வந்தால் அன்னை நினைவு என்பதில் இருந்து இடையறாத அன்னை நினைவு.
- சூழலை கவனிக்காமல் இருப்பதில் இருந்து சூழலை சூட்சுமமாக கவனிப்பது.
முதலியவை தேவையான அடிப்படை மாற்றங்களாகும்.
இதை சுருக்கமாக சொல்வது என்றால் -“we have to change from Silly (தாழ்ந்த மனநிலை) , Shabby ( சிறு பிள்ளைதனமான) shallow (அர்த்தமற்ற) personality இல் இருந்து. Serious, Systamatic, Sound personality. 3s-டு-3s.
சூழலை கவனிப்பது என்பது முதல் நிலையில் concious acceptance of Mother by watching – அன்னையை வழிபட ஆரம்பித்தில் இருந்து நம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் இதுவரை எவர் வாழ்விலும் ஏற்படாத மாறுதல் என்பதை உணர்ந்து , ஏன் அன்னையிடம் மட்டும் இது நடக்கிறது என்று யோசிப்பது மற்றவர்க்கு பலிப்பது நமக்கு ஏன் பலிக்கவில்லை என்று சிந்திப்பது அது பற்றி அன்னை சொல்லியவற்றை அறிய முனைவது அதன் மூலம் பலிககாதவற்றை பலிக்க வைப்பது என்பதே முதல் நிலையில் concious acceptance என்று எடுத்து கொள்ளலாம்.
மேலும் விழிப்புணர்வு தேவை என்று கர்மயோகி அவர்கள் கவனிக்கச் சொல்லும் இடங்கள்.
பொய்யையும் , பொயின் வடிவங்களையும், பொய்யான செயல்களையும் , நண்பர்கள் ,உறவுகள் உருவில் பாசம் என்ற பெயரில் அன்பு பண்பு என்ற பெயரில் ஏற்று கொள்ளாமல் விலக்க வேண்டும்.
அன்னை பாதுகாப்பிற்கு குறைந்த பட்ச தேவை நல்ல ஒழுக்கம், நல்லெண்ணம், சுத்தம், ஒழுங்கு, தணிவான குரல், சுயநலமும் கீழான எண்ணங்களும் அழிந்த நிலை, இடையறாத நினைவு, ஆத்ம சமர்ப்பணம்.
அன்னையின் பாதுகாப்பை விட்டு விலகும் எந்த காரியத்தையும் செய்ய கூடாது .சுயநலம் கர்வம் பொறாமை மடமை கோபம் நான் என்னும் உணர்வு மரியாதை உணர்வு சந்தேகம் ஆகியவை அகந்தையின் வடிவங்கள். அன்னைக்கு எதிரானவை. அன்னை பாதுகாப்பை விலககுபவை.
நாம் சேவை என்று நினைப்பவற்றிலும் விழிப்புணர்வு தேவை. பிறர் அறியும் சேவைகள் நமக்குத் தெரியும். உண்மையில் வெளியே பலருக்கும் தெரியும்படி செய்யும் சேவைகளே நமக்கு விருப்பமாக இருக்கிறது.
அன்னைக்கு தேவை பரிணாமத்தில் வளர்ச்சி என்பதால் நம் உள்ளே அன்னைக்காக நாம் செய்யும் முயற்சிகள் அத்தனையும் பிறர் அறியாமல் செய்யும் சேவைகள் . அதற்காக அன்னை விரும்பும் முறைகளான consecration , concentration, aspiration, receptivity, gratitude, ஆன்மாவின் பண்புகள் என்று நாம் அறிவது ஆகியவற்றின் உண்மையான பொருள் உணர்ந்து அதே விழிப்போடு இருப்பது விழிப்புணர்வு.
மனிதன் (unconscious) தன்னையறியாதவன். அவன் (conscious) தன்னையறிந்து, பிறகு இறைவனை அறிய வேண்டும் என்பதே அன்னை விரும்புவது. காரணம் அது அவரது வேலையை த் துரிதப்படுத்துகிறது.
அன்னைக்கு முக்கியமானது consciousness (ஜீவியம்) விழிப்பாக இருத்தல். எனவே நாம் எந்த அளவு விழிப்பாக இருக்க முயல்கிறோமோ அந்த அளவிற்கு பரிணாமத்தில் முன்னேறுகிறோம்.
ஒரு சிறு விழிப்புணர்வையும் அன்னை மிகவும் விரும்புகிறார் என்கிறார். கர்மயோகி அவர்கள் சொல்லும் சொல்லும் ஒரு உதாரணம். நாம் தினமும் பனியன் அல்லது உள்ளாடைகளைப் போட்டு துவைக்கப் போடுகிறோம். துவைத்து மடித்து வைப்பார்கள் . ஒரு மாதம் கழித்து கவனித்துப் பார்த்தால் மேல உள்ள மூன்று அல்லது நான்கையே உபயோகப் படுத்தி இருப்போம். முதல் ஒரு மாதம் கண் கண்ணாடியை துடைத்து துடைத்து வைப்போம். பிறகு சரியாக தெரிய வில்லை என்றால் மட்டுமே செய்வோம். இந்து சிறு சிறு awareness and concentration – விழிப்புணர்வை அன்னை விரும்புகிறார்.