இறைவனின் நியாயம், மனிதனுக்கு அநியாயம். அதை இறைவன் துணை இருந்தால் புரிந்துக் கொள்ளமுடியும். அநியாயத்தை நியாயமாக்க முடியும் என்பது ஒரு கருத்து.
கர்மயோகி அவர்கள் நான் சொந்தத் தொழில் ஆரம்பித்த போது pure money என்று ஒரு concept சொன்னார். 2008 இலிருந்து 2012 வரை அதன்படி இருந்தபோது தொழில் அபரிதமாக வளர்ந்தது. 2013-2015 மேலும் இரண்டு கிளைகள், பல இடங்களில் வேலைகள் என்று மற்றவர்களை சார்ந்து இருந்தபோது , சமூகச் சூழல், அகந்தை அடிப்படையில் சில முடிவுகள் எடுத்தேன் – தொழில் சரிய ஆரம்பித்தது. வெள்ளம் அனைத்தையும் அடித்துச் சென்றது. பின் சுதாரித்து மீண்டும் அதே concept இல் சென்ற போது இழந்ததையெல்லாம் பெற்றேன் . இதை அன்னை நம் செயல்களை அதன் மறுமொழிகளைப் புனிதப்படுத்தித் தருகிறார் என்பது ஒரு விளக்கம். அந்தப் பணம் முன்பை விட அதிக பட்சம் அன்னை சேவைக்குப் பயன்பட்டது.
என் மேனேஜர் எதிரானவரோடு சேர்ந்து எனக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய போது, அவர் மேல் வந்த கோபம் நியாயமானது. அவரை அழிக்க எல்லாவிதமான power and influence என்னிடம் இருந்தது. ஆனால் consciousness approach – பிடியை விடுதல் – என்ற அறிவுரைப்படி அதை அணுகினேன் ஏழு அல்லது எட்டு மாதங்கள் தாங்கமுடியாத mental tension. பின் எப்படியோ அமைதியானேன் அல்லது மறந்து விட்டேன். இது நடந்தது 2013-இல். ஆனால் அவர் மூலமாகவே வெள்ளத்திற்கு பிறகு ஒரு பெரிய project உம் – இப்போது pandemic dull period க்கு பிறகு ஒரு project உம் வந்தது. குறிப்பாக எனக்குத் தேவைப்படும் நேரத்தில் வந்தது.
அநியாயம் என்று நாம் நினைப்பதன் பின்னால் உள்ள நியாயத்தை இறைவன் விரும்பும் வகையில் புரிந்துக் கொண்டால் இழந்தவற்றை பெறலாம். சாவித்ரி சத்தியவானை பெற்றது போல அது.
அன்னை கோட்பாடுகள் செயல்களின் தரத்தைத் தாமே உயர்த்தும். சில சூட்சுமங்களைத் தாமே செயல்பட வைக்கும். அவை ஆன்மீகச் செயல்கள் என்பதால், செயல்களின் தரம் உயரும்; மாற்றத்திற்கு shift உதவும். நமது பிரார்த்தனை பல நாள் பலிக்காத சமயத்தில், அதற்குரிய மன மாற்றத்தைப் பயன்படுத்தினால் அது ஆன்மீக முறையாகும். உடனே பலிக்கிறது. மன மாற்றத்திற்கு முயல்வது ஒரு வகையில் நம்மை அன்னைக்கு சமர்ப்பணம் செய்வதாகும்.