ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்துக் கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அதன் (mission) ஏன் வந்தது, எதற்கு இருக்கிறது, எதற்கு உபயோகமாகிறது என்பது புரிய வேண்டும். அதன் மூலம் நம்பிக்கை ஏற்பட வேண்டும் , அது திட நம்பிக்கையாக வளர்த்து , அசைக்க முடியாத நம்பிக்கையாக வேண்டும். (From belief to faith, from faith to trust). அது பிறகு ஆற்றலாக மாறி, திறமை, திறன் ஆக வெளிப்பட வேண்டும். ( force , skill , capacity ). ஒரு பாடத்தைக் கற்க ( கணிதம், அறிவியல் etc., ) , ஒரு வேலையை கற்க என்ன முறையோ அது தான் ஆன்மீகத்திற்கும்.
சச்சிதானந்தம் என்பதில் சத் என்பது existance. சித் என்பது – consciousness. ஆனந்தா என்பது Ananda . இதில் நாம் பேசுவது சித்-சக்தி பற்றி. ( consciousness force ). சித் -உலகை சிருஷ்டிக்க அதில் ஆனந்தத்தைத் தேட ஒரு சக்தியை உருவாக்கியது. சித், சித் -சக்தியாக பிரிந்த இடம் அன்னை உருவான இடம். சத்தியத்திற்கான உயிரான இடம் என்பதால் அது சத்திய ஜீவியதிற்க்கான இடம். அன்னைக்கான இடம். அல்லது அதுவே அன்னை. அதனால் சித் அடைய விரும்பிய ஆனந்தத்தை conscious ஆக மனிதனில் உருவாக விடுகிறார் அன்னை. Ego அதை unconscious ஆகத் தடுக்கிறது. கேட்டதிற்கு எதிரான நல்லதாக இருந்தாலும், நேரடியான நல்லதாக இருந்தாலும், எது நல்லது, எந்த நல்லதை செய்ய வேண்டும் என்பது எல்லாம் அகந்தையின் அறியாமையின் முடிவு என்பதால் – life இல் அது obstruction , contraction ,experience , realization , expansion , realization என்று வருகிறது. Life response ஆக வருகிறது.
அப்படி இல்லாமல் Mother’s Choice எது என்று பார்த்து நேரடியாக அந்த ஞானத்தை சித்-தின் ஆற்றலை ஏற்று கொண்டால் நேரடியாக அன்னை மட்டுமே தருவார். அதாவது consciousness force – மட்டுமே வேலை செய்யும். வாழ்வின் வழியான ஒரு பிரச்சினை வந்து பின் முன்னேறுவது என்று இருக்காது.
இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால்-பிரம்ம்ம் ஆனந்தத்தை அனுபவிக்க சத்தில் அசைவை ஏற்படுத்தி இரண்டாக பிரியும் போது -ஆன்மா – சத்தியம்-( Spirit – Truth) -ஆக பிரிகிறது. அதனால் சத்தியம் என்பது ஆன்மாவிற்கு நெருக்கமானது என்று கூறலாம். அல்லது ஆன்மாவின் திறவுகோல் சத்தியம் என்று கூறலாம். அதாவது சத்தியம் என்பதே பிரம்மனின் முதல் படைப்பு.( Truth consciousness). அதுவே அன்னை என்ற உருவகமாக பரிணாமத்தை துரிதப்படுத்த வந்த சக்தியாக செயல் படுகிறது.
ஆனந்தத்தை அனுபவிப்பவனுக்கும் -அவன் தேடும் ஆனந்தம் இருக்கும் இடத்தையும் சேரவைப்பது துரித படுத்துவது என்ற இடத்தில் இருக்கிறார் அன்னை . (as a bridging force between “THAT” which seeks delight and the “Soul” into which it is sought). அதுவே பரிணாம முன்னெற்றம். அது சத்தின் சட்டம். அதுவே அன்னையின் சட்டம். அன்னையின் சட்டம் என்பதால் உண்மைக்காக, consciousness evolution-காக நாம் செய்யும் அனைத்திற்கும் உதவ கூடிய நிலையில் இருக்கிறார். அதனால் அவருக்கு வாழ்வின் முறைகள் தேவை இல்லை. காலம் தேவை இல்லை.
நாம் உயர்ச்சித்தம் ஒன்றை எடுக்கும்போது அல்லது உயர் சித்தத்திற்கான மன மாற்றம் பெறும்போது வாழ்வு எதிர்பாராத அல்லது எதிர்பார்ப்பை விட அதிக முன்னேற்றம் கொடுக்கும் காரணம் இதுதான்.