எல்லாருள்ளும் நாம் இருக்கிறோம்:
நடைமுறையில் இதை எப்படிப் பார்க்கலாம் என்று யோசித்த போது : All in each and Each in All- என்பதை கர்மயோகி அவர்கள் ஒரு விளக்கத்தில் ஆன்மா இன்னொரு ஆன்மாவைதொடும்போது அதை புரிந்துக் கொள்ள முடிவது என்கிறார். அது முதல் நிலையில் நாமே அவர், அவரே நாம் என்ற அறிவை தந்து, பின் உள்ளும் புறமும் ஒன்றே என்ற ஞானத்தில் முடியும் என்கிறார்.
இதை தினசரி வாழ்வில் பொருத்திப் பார்த்தால் – உதாரணமாக-குழந்தையிடம் பல விஷயங்களை சொல்லாமலே புரிந்து கொள்கிறோம். Boss -டம் பல விஷயங்களை சொல்லாமலே புரிந்து செய்கிறோம். மனைவி சொல்லாமலே பலவற்றை புரிந்து நடக்கிறார். வாடிக்கையாளர் சொல்லாமலே தொழில் நடத்துபவர் புரிந்து நடக்கிறார் – இதை எல்லாம் நாம் குறிப்பறிந்து நடப்பது என்று எடுத்து கொள்கிறோம். இது எப்போது வரும் என்றால், நல்ல சீரமைவு (alignment) , அன்னியோன்னியம் வரும்போது வருகிறது.
அது வெளிப்படும்போது நம் நடத்தையில் -expansiveness, other man point of view, non reaction, silence என்பது போன்ற பண்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதை விருப்பப்பட்டு நாம் செய்யவில்லை. அது தானாகவே – ஒரு உறவுக்காக உள்ளுணர்வின் மூலம் வந்தது. அந்த உள்ளுணர்வு வந்ததற்கு காரணம் -மேலே சொன்ன வரிசையில் -அன்பு, விஸ்வாசம்,கற்பு, நாணயம் போன்ற பண்புகள் நம்முள் இருந்ததால் அந்த உள்ளுணர்வு வந்தது.
அதாவது ஆன்மாவின் ஞானம் பயன்படும் சக்தியாக மாறிய நிலையில் பண்பாகிறது. அதனுடன் நம் மனம் ஒன்றும் பொழுது அது செயல்படும் சக்தியை பெற்று சுபாவமாகிறது. குழந்தை, பாஸ், மனைவி,கஸ்டமர் என்று நாம் ஒன்றியதை போல அன்னையுடனும், மற்றவர்களுடனும் நம்மால் ஒன்ற முடிந்தால் அது உள்ளுணர்வின் மூலம் செயல் படுவதில் ஆரம்பித்து அனைவரிலும் நாம் இருக்கிறோம் , அனைவரும் நம்மில் இருக்கிறார் என்பதில் முடியும்.